ஜாதியை வைத்து திட்டுகிறார்கள்.. சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள்.. மோடி பரபர பேச்சு
சிலர் என் மீதுள்ள வெறுப்பு காரணமாக என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசியுள்ளார்.
சென்னை: சிலர் என் மீதுள்ள வெறுப்பு காரணமாக என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடிஎதிர்க்கட்சிகள் பற்றி நீண்ட நேரம் பேசினார்கள். சுமார் 30 நிமிடம் அவர் இதுகுறித்து பேசினார்.
தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!
எம்ஜிஆர் காங்கிரஸ்
மோடி தனது பேச்சில், எம்ஜிஆர் அரசை காங்கிரஸ்தான் டிஸ்மிஸ் செய்தது. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி காங்கிரஸ் சர்வாதிகாரமாக செயல்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக அரசை கூட டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால் இப்போது அவர்களே கூட்டணி வைத்துள்ளனர்.
மோடி வெறுப்பு
மோடி வெறுப்பு அதிகமாகிவிட்டது. மோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை திட்டுகிறார்கள். சிலர் என் பிற்படுத்தப்பட்ட ஜாதியை திட்டுகிறார்கள்.
கொலை
சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை: நான் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
தமிழக நலன்
ஊழலை கலைவதில் தீவிரமாக இருக்கிறோம். தேசிய பாதுகாப்பில் நாம் வலிமையுடன் இருக்கிறோம் . இந்தியாதான் எப்போதும் முதல்: மக்கள்தான் முதல். கடந்த 4 வருடத்தில் நிறைய செய்துள்ளோம். தமிழக நலனுக்கு நிறைய செய்துள்ளோம்.
நாற்பதும் நமதே
பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக மக்களே எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்.நாளை நமதே : நாற்பதும் நமதே. எல்லோருக்கும் நன்றி, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.