கேவலம் சொத்துக்காக.. பெற்ற தாயை கத்தியால் குத்திய மகன்.. வண்டலூரில் ஷாக் கொடுக்கும் வீடியோ
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் குடும்ப சொத்து பிரச்சனையில் தாயை மகன் கத்தியால் சரமாரியாக குத்தியதில் தாய் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரது , மகன் கைது செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த வண்டலூர் வேம்புலியம்மான் கோவில் தெருவை சேர்ந்த ஆலயம்மாள் (72). இதய நோயாளியான இவரது கணவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு பூபதி, பாபு, ஹரிகிருஷ்ணன், தண்டபாணி என 4 மகன்களும், அமுதா என்கிற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் குடும்ப சொத்து காரணமாக ஆலயம்மாளுடன் முதல் மகன் பூபதிக்கும் பிரச்சனை இருந்துள்ளது.

வீட்டின் சுவர்
இந்த நிலையில் அவர்களின் வீட்டின் சுவர் எகிறி குதித்து உள்ளே வந்த பூபதி, தாய் ஆலயம்மாளை சரமாரியாக முகம், கழுத்து, மார்பு, முதுகு, கைகள், துடை என பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் இருந்த போதிலும் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

ஓட்டேரி போலீஸ்
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் வண்டலூர் ஓட்டேரி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் பூபதி கைது செய்யப்பட்டார். அதே வேளையில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் ஆலயம்மாள் தனியார் மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருகிறார்.

கோபம்
மேலும் தாய் ஆலையமாளை குடும்ப சொத்து பிரச்சனையில் மகன் கத்தியால் குத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதான இதய நோயாளி தாயை மகன் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பார்ப்போருக்கு கோபத்தை வரவழைத்துள்ளன.

கத்திக் குத்து
கேவலம் சொத்து பிரச்சினைக்காக பெற்ற தாயை ரத்தம் வரும் அளவுக்கு கத்தியால் குத்தி கடுமையாக தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் மகன் பூபதிக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications