ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்த கோரி சோனியா கடிதம்.. வாயில் துணி கட்டுவோருக்கு தெரியுமா?
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை நிறுத்த கோரி 1999-ம் ஆண்டு இப்போதைய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அன்றைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதம் இப்போது வாயில் துணி கட்டி பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராடும் காங்கிரசாருக்கு தெரியுமா? என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நேரடியாக தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யபட்டவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் அடங்குவர். இப்போது பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. அதுவும் 31 ஆண்டுகால சிறை தண்டனைக்குப் பின்னரே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதில் காங்கிரஸ் ஒருபடி மேலே போய், பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக வாயில் துணி கட்டும் போராட்டத்தை இன்று நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 1999-ம் ஆண்டும் 2021-ம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மன்னிப்பாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறிய கருத்துகள் இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினிக்கு தூக்கு தண்டனை உறுதியானது. அப்போது ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அக்கடிதத்தில், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்கு கருணை மனு அனுப்பும் போது அவர்களை மன்னித்து தூக்கு தண்டனையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நளினிக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தி இருக்கிறார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications