சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்.. 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்
சென்னை: சென்னையில் 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் குறைந்த விலையில் தூய்மையான குடிநீர் வழங்கும் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை பெரும்பாடாக இருக்கிறது. மக்கள் வாட்டர் கேன் வாங்கித்தான் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். சென்னையில் ஒரு வாட்டர் கேன் 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்கப்படுகிறது. இதனால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குடிநீருக்காக அதிக அளவு செலவழிக்க வேண்டியதுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சென்னையில் 20 லிட்டர் குடிநீர் வாட்டர் கேனை ரூ.7க்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் வாட்டர் ஏடிஎம்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு இதற்காக 250 சதுர அடி நிலத்தையும், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியையும் அளிக்கும். இதனை பயன்படுத்தி தனியார்கள், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இந்த விநியோகிக்கும் வேலையை அந்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மேற்கொள்வார்கள். இந்த திட்டம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஒரு 20 லிட்டர் கேன் குடிநீர் விற்றால் ரூ1 கிடைக்கும்.
இந்த மலிவு விலை குடிநீர் விற்பனை மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பின் கீழ் சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்பட நகரங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏடிஎம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications