Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புறநகர் ரயில்களில் பெரிய மாற்றம்.. இனி ஜம்முன்னு போகலாம்.. தெற்கு ரயில்வே மேஜர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்குமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்திருந்தது. எனவே இந்த பரிந்துரை அடிப்படையில் ஏசி பெட்டிகளை அடுத்த 6 மாதத்தில் புறநகர் ரயில்களில் இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

தற்போதையில் மும்பை புறநகர் ரயிலுக்கான ஏசி பெட்டிகள் சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னைக்கும் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.

Southern Railway likely to start trail runs of AC coaches in Chennai Suburban Rail in next 6 months

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள்நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பலரும் மெட்ரோவில் பயணிக்கும் நிலையில், மெட்ரோ அல்லாத புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்தால் பலர் ஆர்வமுடன் புறநகர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும், இதன் மூலம் ரயில்வேக்கு வருவாய் அதிகரிக்கும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமும் பரிந்துரை செய்தது.

தற்போதைய நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு, மகளிர், சாதாரண வகுப்பு என்று மூன்று வகையில் உள்ளது. முதல் வகுப்பில் கொஞ்சம் கட்டணம் கூடுதலாக இருக்கும். மற்ற வகுப்புகளில் ஒரே மாதிரி தான் உள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்தால் ஐடி ஊழியர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோர், வயதானவர்கள் என பலரும் கார்களில் செல்லாமல் புறநகர் ரயில்களில் பயணிப்பதை அதிகம் விரும்புவார்கள் என்றும் இதன் மூலம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இதை பரிசீலித்த தெற்கு ரயில்வே, சோதனை அடிப்படையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை காண முடியும். கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இது ஒருபுறம் எனில், சென்னை கடற்கரை வேளச்சேரி புறநகர் ரயில் வழித்தடத்தில் ஏசி ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. பரங்கிமலை முதல் வேளச்சேரி வழியாக கடற்கரை வரை ஏசி ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். தற்போதைய நிலையில் பரங்கிமலை வேளச்சேரி பறக்கும் ரயில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் பரங்கிமலை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+