பயணிகளே தெரியாமல் போய் டிரெயினை விட்றாதீங்க.. நெல்லை, மதுரை புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்!
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மதுரை வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் புதிய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மறக்காமல் புதிய அப்டேட் டைம் டேபிளை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ரயில்வே நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருகிறது. அதேபோல, தண்டவாள சீரமைப்பு பணிகள், கூடுதல் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற கட்டமைப்பு மாற்றங்களால் கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.

தென் மாவட்ட ரயில்கள்
அதுபோக, ரயில்கள் சிக்னல்களுக்கு காத்திருக்கும் நேரமானது குறையும். அதேபோல, கூடுதல் நிறுத்தங்களையும் சில ரயில்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணிகளை கருத்தில் கொண்டு ரயில்வே, அவ்வப்போது ரயில்கள் புறப்படும் நேரங்களை மாற்றியமைப்பதை பார்க்க முடிகிறது. இதில் சில ரயில்கள் சென்றடையும் நேரம் தாமதமாகவும் மாற்றப்படுகிறது.
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில முக்கிய ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- சென்னை எக்மோரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய இந்த வந்தே பாரத் ரயிலில் சில நிறுத்தங்களுக்கான அட்டவணை மாற்றப்பட்டு இருக்கிறது.
புதிய அட்டவணை
புதிய அட்டவணைப்படி, வந்தே பாரத் ரயில் திருச்சிக்கு இரவு 7 மணிக்கும், திண்டுக்கலுக்கு 7.58 மணிக்கும், மதுரைக்கு 8.45 மணிக்கும், விருதுநகர் (9.20), கோவில்பட்டி (9.48) நெல்லைக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும். இதற்கு முன்பாக இரவு 10.30 மணிக்கு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. தற்போது அரை மணி நேரம் ரயில் தாமதம் ஆகியுள்ளது.
சென்னை எழும்பூர்-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எக்மோரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சி 6.05 (மாலை)க்கு சென்றடையும். மதுரை இரவு 8.35 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் இதற்கு முன்பாக எக்மோரில் 1.45 மணிக்கு புறப்பட்ட நிலையில், தற்போது அரை மணி நேரம் முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. மதுரைக்கு 9.20 மணிக்கு சென்றடைந்த நிலையில் இனிமேல் 8.35க்கே சென்றடையும்.
மதுரை டூ தாம்பரம் செல்லும் ரயில்
மதுரையில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய டைம் டேபிள்படி, மதுரையில் இருந்து இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும். தாம்பரத்திற்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் (76835) புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மாலை 6.10க்கு புறப்பட்ட நிலையில், புதிய அட்டவணைப்படி இனி மாலை 6.35 மணிக்கு புறப்படும். தாமரைபாடி ரயில் நிலையத்திற்கு 8.10க்கு வந்தடையும். திண்டுக்கல் ஜங்ஷன் இரவு 9.05 மணிக்கு சென்றடையும். திருச்சியில் இருந்து 25 நிமிடங்கள் தாமதமாக இனி இந்த ரயில் புறப்படும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications