எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண்; பிரபலங்கள் பிரார்த்தனை
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சப்படும் நிலை இல்லை எனவும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி. நலமுடன் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதனிடையே எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.பி சரண் ஒரு பதிவில், தமது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அச்சப்படும் வகையில் உடல்நிலை இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் எஸ்.பி.பி நலமடைய பிரார்த்திப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலதளங்களில் பின்னணி பாடகி சித்ரா, நடிகை ஶ்ரீப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தொடர்ந்து எஸ்.பி.பி. நலம்பெற பிரார்த்தித்து ட்வீட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.


-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications