எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது.. எக்மோ சிகிச்சை தொடர்கிறது.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ் பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எக்மோ சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. ஏன் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது? எப்படி செயல்படும்?
லேசான முன்னேற்றம்
இதையடுத்து திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்பதற்காக, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மருத்துமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.
சீராக உள்ளது
இந்த நிலையில் இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கனவே வழங்கப்பட்டு வரக்கூடிய அனைத்து வகையான நவீன சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப் பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் அந்த செய்தி குறிப்பு விரிவாகத் தெரிவித்துள்ளது.
எக்மோ சிகிச்சை
இது பற்றிய செய்தி குறிப்பை பாருங்கள்: கொரோனா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியம். வென்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச நிபுணர்கள்
அவரது தற்போதைய மருத்துவ நிலைமை சீராக உள்ளது. தொடர்ந்து பல துறை நிபுணர்களைக் கொண்ட மருத்துவக்குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. மருந்தியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தொற்றுநோய், நுரையீரல் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மருத்துவர்களும் இதில் அடங்குவர்.
உலகம் முழுக்க
உலகம் முழுக்கவே கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கும் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வதேச மருத்துவர்கள் மற்றும் எங்களது மருத்துவ குழுவினர் இணைந்து தொடர்ந்து எஸ்பி பாலசுப்பிரமணியமுக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.