பட்டாசே! நாளை அதிகாலை முதல் மெட்ரோ ரயிலில் ஃப்ரீயா போகலாம்! மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு சர்ப்ரைஸ்!
சென்னை: சென்னையில் மாரத்தான் பங்கேற்பாளர்கள் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்போர், QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
4வது சர்வதேச கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமையான நாளை (ஆகஸ்ட் 6) அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, மற்றும் 42.2 கி.மீ என 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது. அனைத்துப் பிரிவு மாரத்தான் போட்டிகளும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது.

கருணாநிதி நினைவு சர்வதேச மாரத்தான் நாளை நடைபெறுவதையொட்டி, மாரத்தான் பங்கேற்பாளர்களின் வசதிக்காகவும், அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, மாரத்தான் பங்கேற்பாளர்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி, நாளை அதிகாலை 3.40 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இருமுறை மட்டும் Round Trip, மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகள் மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் பின்வரும் அட்டவணையின் படி இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து அதிகாலை 3.40 மணிக்கு சென்னை அரசினர் தோட்டத்திற்கு முதல் மெட்ரோ ரயில் புறப்படும்.
சின்னமலை ஸ்டேஷனில், 3.50 மணிக்கும், கிண்டியில் இருந்து 3.55 மணிக்கும், விமான நிலையத்தில் இருந்து 4 மணிக்கும், விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து 4 மணிக்கும், விமான நிலையத்தில் இருந்து 4.10 மணிக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் நாளை இயக்கப்படுகிறது. எனவே மாரத்தான் பங்கேற்பாளர்கள் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்க்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications