தமிழ்நாட்டின் கோயில்களில் இன்னைக்கு ஸ்பெஷல் பூஜைகள்.. பக்தர்கள் குஷியோ குஷி: ஜொலி ஜொலிக்கும் அயோத்தி
சென்னை: அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்த நிலையில், கோயில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.. அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.. 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், இன்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

குழந்தை ராமர்: குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார்.
அந்தவகையில், இன்றைய தினம், கும்பாபிஷேக தினத்தன்று பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதே வேண்டுகோளை, தமிழக ஆளுநர் ரவியும் நேற்றைய தினம் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்த மாநில அரசு தடை விதித்ததாக நேற்றைய தினம் செய்தி வெளியானது.
கண்டனம்: உடனே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு, "தமிழ்நாடு அரசின் இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு உடனடியாக பதிலளித்ததுடன், ராமர் கோயில் தொடர்பாக தமிழ்நாடு கோயில்களில் அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றும், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டு, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
சிறப்பு பூஜைகள்: இதையடுத்து, இன்றைய தினம், தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.. மேலும், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் போன்றவையும் நடத்தப்படுகின்றன.. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
திருவண்ணாமலையில் கோவில் கொடிமரம் அருகே வந்த விஐபிக்கள்.. ஆந்திர குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications