சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சுஜித்துக்காக பிரார்த்தனை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சாந்தோம் தேவாலயத்தில் குழந்தை சுஜித்துக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

Special prayers conducted in Chennai Santhome Church for Sujith

அப்போது தவறி அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இதையடுத்து அவரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. குழந்தை விழுந்துள்ள இடத்துக்கு பக்கவாட்டில் இன்று காலை முதல் ரிக் இயந்திரம் மூலம் துளை போடும் பணி நடைபெறுகிறது.

சுஜித் நல்லப்படியாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. சுஜித்துக்காக நேற்றைய தினம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

ஆக்சிஜன் கொடுத்து இருக்கோம்.. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. அமைச்சர் விஜய் பாஸ்கர்!ஆக்சிஜன் கொடுத்து இருக்கோம்.. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. அமைச்சர் விஜய் பாஸ்கர்!

அதை தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்று மீட்பு பணிகள் நடைபெறும் நிலையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை முன் வைத்தனர்.

English summary
Special prayers conducted in Chennai Santhome Church for rescuing Sujith who fell into the borewell.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X