வீக் எண்ட்.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 2 ஸ்பெஷல் ரயிலை அறிவித்த ரயில்வே
சென்னை: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வரும் திங்கள் கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் சொந்த ஊரில் நடைபெறும் சுப நிகழ்சிகளுக்காகவும் மக்கள் டிரவல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனால், சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து அனைத்து பஸ்களும் நிரம்பி வழிகின்றன. தனியார் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்த்து துறை சிறப்பு பேருந்துகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இன்றும் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும். சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை மறுநாள் காலை 11 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு கிளம்பும் ரயிலானது நாகர்கோவிலில் இருந்து நண்பகல் 1.20 மணிக்கு கிளம்பும். வள்ளியூருக்கு 1.51 மணிக்கு வரும் இந்த ரயில் ஒரு நிமிடம் நின்று செல்லும். திருநெல்வேலிக்கு 3 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
கோவில் பட்டி, சாத்தூர், விருது நகர், மதுரை (5.15 ) திண்டுக்கல், திருச்சி (இரவு 8 மணி , 10 நிமிடங்கள் நிற்கும் விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 9 ஸ்லீப்பர் கோச் களும்,11, இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 02 இரண்டாம் வகுப்பு (Divyangjan Friendly) பெட்டிகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications