தாம்பரம், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
சென்னை: கோவை ஈரோடு திருப்பூர் சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரயில் ஒன்றும், சென்னை சென்ட்ரல் வழியாக ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வழியாக சிறப்பு ரயில் குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயில் எண்:06043 தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

ரெயில் எண் : 06044 கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி அன்று மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சென்ட்ரல் வழியாக கோவைக்கு சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: ரயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் கோவையில் வரும் மார்ச் 31ம் தேதி ஞாயிறு அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை சென்ட்ரலுக்கு 8.30க்கு வரும்.
அதேபோல் ரயில் எண் 06049 ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 10.20க்கு புறப்பட்டு அன்று இரவு 8.25க்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்த வகையில் கோவையில் இருந்து வரும் ரயில் எண் 06050 என்ற சிறப்பு ரயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். இந்த ரயிலில் 20 ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications