ஆங்கில புத்தாண்டையொட்டி... அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்.. சிறப்பு வழிபாடு..!
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் அதிகாலையிலேயே குவியத் தொடங்கினர்.
இதேபோல் தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என பல்வேறு காரணங்களால் மக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் வந்துள்ள புத்தாண்டாவது வாழ்வில் ஏற்றமும் வளமும் கொடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் புத்தாண்டின் முதல் நாளான இன்று கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் கூடினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறை வழிபாடு நடத்தினர்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கணபதி என்பவர், '' கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடக்கப்பட்டது. இந்தாண்டு அது போல் எதுவும் நடந்துவிடாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இந்த உலகத்தில் கொரோனாவை முற்றிலும் அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டறிய வேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்'' என்கிறார்.
புத்தாடைகள் அணிந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட காட்சிகளையும் கோயில்களில் காணமுடிந்தது. சென்னையை பொறுத்தவரை தி.நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் ஒரு கி.மீ. வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சிறப்பு தரிசனம் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications