ஆங்கில புத்தாண்டையொட்டி... அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்த மக்கள்.. சிறப்பு வழிபாடு..!
சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் அதிகாலையிலேயே குவியத் தொடங்கினர்.
இதேபோல் தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என பல்வேறு காரணங்களால் மக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் வந்துள்ள புத்தாண்டாவது வாழ்வில் ஏற்றமும் வளமும் கொடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் புத்தாண்டின் முதல் நாளான இன்று கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக மக்கள் கூடினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இறை வழிபாடு நடத்தினர்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கணபதி என்பவர், '' கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடக்கப்பட்டது. இந்தாண்டு அது போல் எதுவும் நடந்துவிடாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இந்த உலகத்தில் கொரோனாவை முற்றிலும் அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டறிய வேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்'' என்கிறார்.
புத்தாடைகள் அணிந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட காட்சிகளையும் கோயில்களில் காணமுடிந்தது. சென்னையை பொறுத்தவரை தி.நகரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி கோயிலில் ஒரு கி.மீ. வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சிறப்பு தரிசனம் செய்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications