Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90 பேரின் உயிரை.. கெட்டியாக பிடித்த விமானி! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. விமானம் புறப்படுவதற்கு சில விநாடிகள் முன்னதாக இதை கண்டறிந்த விமானி, சாமர்த்தியமாக விமானத்தை நிறுத்தி 90 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

சமீப காலமாக விமான விபத்துக்கள் பெரும் கவனம் பெற்று வருகின்றன. நன்றாக பறந்துக்கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து விபத்தில் சிக்குவதெல்லாம் ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் அகமதாபாத் விமான விபத்துக்கு பின்னர், விமானிகள் கூடுதல் கவனத்துடன் விமானங்களை கையாள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

SpiceJet Karnataka tamil nadu

இந்நிலையில்தான் இன்று 90 பேரின் உயிரை விமானி காப்பாற்றியிருக்கிறார். அதாவது சென்னை விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் சிவமோகாவக்கு ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், மதியம் 2.50 மணிக்கு புறப்பட இருந்தது. புறப்படுவதற்கு முன்னர் விமானத்தின் பாகங்கள் சரியாக இயங்குகிறதா? என்பது பரிசோதிக்கப்படும். பரிசோதனை முடிந்து, விமானம் எரிபொருள் நிரப்பப்பட்டு, கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலுடன் ரன்வேக்கு வந்தது.

இங்கிருந்து கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி வாங்க வேண்டும். எல்லா டேக் ஆஃப்-க்கும் கட்டுப்பாட்டு அறையின் அனுமதி மிகவும் முக்கியம். விமானத்தின் ஓடுதளத்தில் எந்த விமானங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் கட்டுப்பாட்டு அறை, விமானம் டேக் ஆஃப் ஆக அனுமதியளிக்கும். அதன் பின்னர், முழு கன்ட்ரோலும் விமானி கைக்கு வந்துவிடும். விமானி பிரேக்கை பிடித்துக்கொண்டு விமானத்தின் என்ஜினை முழு வேகத்தில் இயக்குவார்.

இந்த நேரத்தில் விமான என்ஜினில் வழக்கத்திற்கு மாறாக ஏதாவது தெரிந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும். சரி செய்ய முடியவில்லை எனில் டேக் ஆஃப் ரத்து செய்யப்படும்.

இந்த கட்டத்தில்தான் ஸ்பைஸ் ஜெட் விமானி சில தொழில்நுட்ப பிரச்சனைகளை கண்டறிந்துள்ளார். இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக விமானம் மேலே எழும்புவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் 85 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 90 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஒருவேளை இதே பிரச்சனையோடு விமானம் டேக் ஆஃப் ஆகியிருந்தால் விபத்தை சந்தித்திருக்கலாம். அதாவது டேக் ஆஃப் மூன்று நடைமுறையாக செயல்படுத்தப்படும்.

1. V1 (Decision Speed)
2. Vr (Rotation Speed)
3. V2 (Take-off Safety Speed)

இதில் முதல் அம்சத்தில், விமானத்தின் என்ஜின் முழு வேகத்தை எட்டியிருக்கும். எனவே விமானி, பிரேக்கை ரிலீஸ் செய்வார். விமானம் வேகமாக ஓடு பாதையில் ஓடும். வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இந்த நேரத்தில் டேக் ஆஃபை ரத்து செய்து, விமானத்தை நிறுத்த முடியாது. ஏனெனில் ஓடுபாதையின் நீளம், வேகமாக ஓடும் விமானத்தை நிறுத்தும் அளவுக்கு போதுமானதாக இருக்காது.

எனவே இரண்டாவது கட்டத்தில் விமானத்தின் மூக்கு பகுதி மேல் நோக்கி உயர்த்தப்படும். இதனால் விமானத்திற்கு லிப்ட் கிடைக்கும். மொத்த விமானமும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர தொடங்கும்.

இதனையடுத்து விமானம் மூன்றாவது கட்டத்திற்கு செல்லும். அதாவது போதுமான உயரத்தை விமானம் எட்டும் வரை என்ஜின் முழு வேகத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும். விமானிகள், விமானத்தின் திசையை இந்த நேரத்தில் மாற்றி அமைப்பார்கள்.

இந்த மூன்று நடைமுறையின் போது ஒரு என்ஜின் பெயிலியர் ஆனாலும் விமானத்தை பாதுகாப்பாக காப்பாற்றிவிட முடியும். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். எனவே பறப்பதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டிருப்பது சிறந்த நடவடிக்கை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+