"அணில் பிரச்சனை.." செல்வப்பெருந்தகை கேட்ட ஒரே கேள்வி.. அடுத்த நொடியே வெடித்து சிரித்த சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். அப்போது சீமானிடம் ""அணில் பிரச்சனை எல்லாம் வேகமாகப் போகின்றதா?" எனக் கேட்டதால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாம். எல்லாக் கட்சிகளும் கூட்டணி, தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. இதற்கு இடையே அரசியல் தலைவர்களின் எதிர்பாராத சந்திப்புகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

Squirrel issue NTK Seeman and Congress Selvaperunthagai Light-Hearted Exchange in Chennai Event

சீமான்- செல்வப்பெருந்தகை

அப்படித் தான் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் கைகளைப் பிடித்தவாறு சில நிமிடங்கள் உரையாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது சீமான் தன்னுடன் வந்த பிரமுகர்களைச் செல்வப்பெருந்தகையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.

அணில் பிரச்சனை

அவர்களுக்கு வணக்கம் சொன்ன செல்வப்பெருந்தகை, டக்கென சீமானை பார்த்து, "அணில் பிரச்சனை எல்லாம் வேகமாகப் போகின்றதா?" என்று கேட்டார். முதலில் என்ன கேட்கிறார் எனப் புரியாமல் சீமான் குழம்பவே, செல்வப்பெருந்தகை மீண்டும் சொன்னார். இதைக் கேட்டதும் சீமானும் அருகே இருந்தவர்களும் வெடித்துச் சிரித்தனர். இதனால் அங்கு முழுக்க சிரிப்பலை நிலவியது. பிறகு இரு தலைவர்களும் இன்னும் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தொடர்ந்து சீண்டும் சீமான்

கடந்த சில வாரங்களாகவே நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ச்சியாக விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்யை அணில் எனக் குறிப்பிட்டே சீமான் விமர்சிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பிரஸ் மீட்டில், விஜய் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குச் சீமான், "அணில் ஜங்கிள், ஜங்கிள் என்று தான் கத்த வேண்டும்.. இப்போது ஏன் அங்கிள் அங்கிள் என கத்துகிறது" எனச் சாடியிருந்தார்.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடந்தது. அதில் பேசிய சீமான், "காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துத் தான் காடுகளை வளர்க்க நாம் பாடுபடுகிறோம்" என்று மீண்டும் தாக்கிப் பேசியிருந்தார். இதுபோல விஜய்யை சீமான் தொடர்ச்சியாகவே தாக்கிப் பேசி வரும் நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே செல்வப்பெருந்தகை கேட்டுள்ளார். செல்வப்பெருந்தகை நேரடியாக விஜய் பெயரைக் குறிப்பிடவில்லை என்ற போதிலும், அவர் இதையே சொல்வதாக இணையத்தில் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள்.

தமிழ்நாடு தேர்தல்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்றே தெரிகிறது. திமுக மற்றும் அதிமுக தலைமையில் நிச்சயம் கூட்டணிகள் உருவாகும். மேலும், சீமான் வழக்கம் போலவே தனித்துக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இது தவிர விஜய் தலைமையிலும் ஒரு கூட்டணி உருவாகும் என்றே தெரிகிறது. தவெக ஆட்சியை அமைத்தால் அதிகாரத்தில் பங்கு என விஜய் சொல்லி வரும் சூழலில், தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் விஜய்யை நோக்கிச் செல்லக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+