அணில் vs தெர்மாக்கோல்.. கலாய்த்த செல்லூர் ராஜுவுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
சென்னை: சித்திரை திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை தெர்மாக்கோல் விஞ்ஞானி என ட்விட்டரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது உரையாற்றிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்." எனப் பேசினார். செல்லூர் ராஜுவின் இந்த பேச்சால் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாய்விட்டு சிரித்தனர்.

அப்போது அமைதியாக மவுனம் காத்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது ட்விட்டரில் பொங்கி இருக்கிறார். அவர் தனது பதிவில், "தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்." எனப் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அணில் வயர்களை கடிப்பதால் மின் தடை ஏற்படுவதாக செந்தில் பாலாஜி அப்போது அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு தற்போது விமர்சித்து இருக்கிறார்.

Recommended Video
அதேபோல், செல்லூர் ராஜு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது மதுரை வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோலுக்கு டேப் ஒட்டி மிதக்கவிட்டது தேசிய ஊடகங்கள் மட்டுமின்றி சீன ஊடகங்கள் வரை பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications