இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் உடன் ரஜினி சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இன்று சென்னையில் சந்திப்பு நடத்தினார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இன்று சென்னையில் சந்திப்பு நடத்தினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தற்போது வெளியாகி உள்ளது. தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் நேற்றுதான் வெளியானது.

எப்போதும் ரஜினி படத்திற்கு இருப்பது போல இந்த படத்திற்கும் பெரிய அளவில் ஓப்பனிங் இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக படம் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் இன்று சென்னையில் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்சனை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள். அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications