இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. தமிழக மீனவர்களை தாக்கி பொருட்கள் கொள்ளை.. ஷாக்
சென்னை: வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நிம்மதியை இலங்கை கடற்படையும் அவ்வப்போது கெடுத்து விடுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழக அரசும் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த 2 லட்சம் மதிப்புள்ள மீன் பிடி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீனவர்களை கத்தி, கம்பால் தாக்கிவிட்டு படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், வலைகள், செல்போன் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications