மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு ஏன்.. ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை திசை திருப்பவே சபரீசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் அனைவரின் ஈரக்குலையையும் நடு நடுங்க வைத்தது அறிந்ததே. இந்நிலையில் இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக திமுகவின் இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் தனது பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அது போல் பதிலுக்கு சபரீசனும் பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை தப்பவிடாமல், உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

வழக்கு பதிவு
பொள்ளாச்சி விவகாரம் தேர்தலில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. ஆளும்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதை திசை திருப்பவே எனது மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தயார்
எனது தூண்டுதலின் பேரில் எல்லாம் நடப்பதாக புகாரும் அளித்துள்ளனர். இதை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எதற்கும் தயாராகவே உள்ளோம்.

சதி
தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். தேர்தல் நடத்தக் கூடாது என்பது மத்திய- மாநில அரசுகளின் நோக்கமாக உள்ளது. தேர்தல் நடந்தால் ஆட்சி இருக்காது என்பதால் இதுபோல் சதி செய்கின்றனர்.

நாங்களும்தான்
எனவே தமிழக மக்களே தயாராக இருங்கள். இந்த ஆட்சிகளை அப்புறப்படுத்த நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications