ஸ்டாலின் நேரில் ஆஜராகத் தேவையில்லை.. விலக்கு அளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்காக நேரில் வருவதற்கு விலக்கு கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் செப்டம்பர் 20ம் தேதி இந்த சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். சிறப்பு நீதிமன்றத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் ஸ்டாலின் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு முதல் நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்பு ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அடுத்தடுத்த வழக்குகளில் ஸ்டாலின் ஆஜராக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவதூறு வழக்கின் விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
2011- 2016 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக 3 வழக்குகள் தொடரப்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் "அதிமுக ஆட்சியின் சார்பில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், அவரது மறைவிற்குப் பிறகு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் 7 அவதூறு வழக்குகளை என் மீது போட்டுள்ளனர். தடா, பொடா, மிசா வழக்குகளை சந்தித்த எங்களுக்கு அவதூறு வழக்குகளை கண்டு பயமில்லை, தமிழக அரசின் அவதூறு வழக்குகளை எந்த சூழ்நிலையிலும் சந்திக்க தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications