Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம்களுக்கு கபர்ஸ்தான்! கிறிஸ்துவர்களுக்கு கல்லறைத் தோட்டம்! ஸ்டாலின் கொடுத்த முக்கிய உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முஸ்லீம்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படும் கபர்ஸ்தான் குறித்தும், கிறிஸ்துவர்கள் இறந்தால் அடக்கம் செய்யப்படும் கல்லறைத் தோட்டம் பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய உறுதி ஒன்றை இன்று கொடுத்துள்ளார்.

அதாவது கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி/நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் / கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Stalin given an important assurance regarding the Muslims Kabristan and the Christians graveyard


சென்னையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது;

• கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;

*மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;

*உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பதைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;

*சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறித்துவக் கல்லைறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் ஆணையையும் இந்த வார இறுதிக்குள்ளாக வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய விதி, தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள கிறித்துவக் கல்லைறைகளுக்குப் பொருந்தும்.

*கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநகராட்சி/நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் / கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.

• கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

• கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் (Revised Guidelines) இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.

•மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்க திறந்த மனத்தோடு இருக்கிறேன்.திராவிட மாடல் அரசின் இந்தப் பணித் தொய்வின்றித் தொடரும் என்று கூறி, அதற்கு உங்களது ஒத்துழைப்பினைத் தொடர்ந்து தாருங்கள் எனக் கேட்டு விடைபெறுகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+