பதவி பறிபோகும்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த ஷாக்! ''நான் காலி.. இப்ப நான் காலி''
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் என கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதேபோல் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 1ஆம் தேதியான இன்று திமுக தொகுதி பார்வையாளர்கள்/ மாவட்டச் செயலாலர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என துரைமுருகன் அறிவித்திருந்தார்.

காணொலி மூலம் நடக்கும் கூட்டம் தானே, வழக்கம் போல் அறிவுரைகள் கூறிவிட்டு கூட்டம் கலைக்கப்படும் என்ற நினைப்பில் வந்து அமர்ந்த பலருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச பேச வியர்த்துக் கொட்டியிருக்கிறது. தொகுதிப் பார்வையாளர்களுக்கு பல மாவட்டச் செயலாளர்கள் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என புகார் வந்திருப்பதாக கூறியவர், இனியும் இப்படி ஒரு புகார் வரும் பட்சத்தில் மாற்றம் உறுதி என்பதை புரிய வைத்தார்.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலக நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிடுவேன் என்பதை மிக ஓபனாக கூறி எச்சரித்துள்ளார். இதனால் சம்பிரதாய கூட்டம் என எண்ணி வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் கொடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் முதலவர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இதனிடையே கட்சியின் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் அணுசரித்துச் செல்ல வேண்டியது பற்றியும் அட்வைஸ் அளித்திருக்கிறார்.
கோஷ்டிப் பூசலை மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாரேனும் வேலையை காட்டினால் அப்போதிருக்கிறது கச்சேரி என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மொத்தத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அக்னிப் பரீட்சையாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications