எல்லாவற்றிலும் ஏடாகூடம்.. மு.க.ஸ்டாலினிடம் டோஸ் வாங்கிய எ.வ.வேலு
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் டென்ஷனாக இருக்கிறாராம். இதை அவரிடமே காட்டியதாகவும் சொல்கிறது அறிவாலயம் வட்டாரம்.
ஸ்டாலின் அதிக நம்பிக்கை வைத்துள்ள சிலரின் வேலுவும் ஒருவர். ஸ்டாலின் குடும்பத்துக்கும் வேலு ரொம்ப நெருக்கமானவர். இந்த லாபியால் வேலு சொல்லும் பல யோசனைகளை, ஸ்டாலின் தட்டாமல் கேட்பாராம். அத்தனை நம்பிக்கை.
இந்த அடிப்படையில்தான் லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தலிலும் வேலு சொன்ன பல பரிந்துரைகளை தட்டாமல் ஏற்றார் ஸ்டாலின் என்கிறார்கள். ஆனால் வேலு மீது சரமாரியாக வந்து குவிந்த புகார்களால் கடுப்பாகி விட்டாராம்.

முன்னணி தலைவர்
திமுகவின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. தேர்தல் முடிவுக்கு பின்பு இவர் மீது கட்சியினர் சரமாரி புகார்களை முன்வைத்தார்களாம். இதனால் கொதிப்படைந்த ஸ்டாலின் எ.வ.வேலு மீது கோபத்தில் உள்ளாராம்.

நடந்தது இதுதான்
இது தொடர்பாக நாம் அறிவாலய உள்வட்டாரத்தில் விசாரித்த போது, இடைத்தேர்தலில் சூலூர் தொகுதி பொறுப்பாளராக இருந்த எ.வ.வேலு, அந்தத் தொகுதியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை முறையாக அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

காற்றில் பிறந்த வாக்குறுதி
சூலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது வெற்றி பெறுவாரா பொங்கலூர் பழனிச்சாமி என்று ஸ்டாலின் கேட்டாராம். அப்போது அவரது வெற்றிக்கு நான் உத்தரவாதம். எல்லாம் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. நிச்சயம் வெல்வார் என்று அடித்துக் கூறியிருந்தாராம் வேலு. ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

ஓவர் மிதப்பு
வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் மிதக்கமான மனநிலையில் அவர் தேர்தல் பணியாற்றியதாக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் புகார் கூறினார்களாம். அதிலும் வேலு மரியாதைக்குறைவாக நிர்வாகிகளைப் பேசியதாகவே புகார்கள் குவிந்துள்ளன.

போய்யா போய்யா
கொங்கு மண்டல நிர்வாகிகளை ஸ்டாலினே வாங்க..போங்க..என மரியாதையாக அழைக்கும் நிலையில், எ.வ.வேலு வாய்யா போய்யா..வா..போ..எனப் பேசி அவர்களை வேலை வாங்கியதால் பெரும்பாலோனோர் தேர்தல் பணியில் தலைகாட்டவில்லை என தோல்விக்கான காரணம் பற்றிய விசாரணையில் தகவல் கிடைத்ததாம்.

ஆர்.மணி
இதேபோல், பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.மணி என்பவர் எ.வ.வேலு சாய்ஸ் தானாம். வேட்பாளருக்கு கட்சியினர் அப்போதே அதிருப்தி தெரிவித்த நிலையில், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆர்.மணி வெற்றி பெற்றுவிடுவார் என எ.வ.வேலு தான் ஸ்டாலினிடம் கூறினாராம்.
இப்படி எ.வ.வேலு சொல்லியது எதுவும் நடக்காததாலும், சூலூரில் அவரின் நடவடிக்கைகள் பற்றிய புகாரும் ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால்தான் வேலுவிடம் தனது அதிருப்தியைக் காட்டினாராம் ஸ்டாலின் என்று சொல்கிறது அறிவாலயம் வட்டாரம்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications