சுஜித் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்... மு.க.ஸ்டாலின் உருக்கம்
Recommended Video
சென்னை: ஆள்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் கூறி அவர்களை தேற்றுவது என தெரியாமல் தவிப்பதாக மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அவர்,

சுஜித்தின் இழப்பு அவனது தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல என்றும், அது நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தை சுஜித் நம் நினைவில் இருந்து நிச்சயம் நீங்கமாட்டான் என்றும், காலங்கள் கடந்தாலும் அவனது மறைவு நினைவில் இருந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட பாலகன் சுஜித், இப்போது அனைவருக்கும் நிரந்தர சோகத்தை கொடுத்துவிட்டு போய்விட்டான் என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனி ஒரு உயிர் கூட பலியாகிவிடக்கூடாது என்றும், அதுவே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! #RIPSujith
— M.K.Stalin (@mkstalin) October 29, 2019
ஆழ்துளை கிணற்றுக்குள் எத்தனையோ உயிர்கள் பலியாகிவிட்டதாகவும், இனி மேல் அதுபோன்ற ஒரு நிகழ்வு எந்த இடத்திலும் நடைபெறக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சிறுவன் சுஜித் மீண்டுவந்துவிடுவான் என காத்துக்கொண்டு இருப்பதாகவும், அவன் மீண்டு வந்துவிட வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications