சுஜித் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்... மு.க.ஸ்டாலின் உருக்கம்
Recommended Video
சென்னை: ஆள்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் கூறி அவர்களை தேற்றுவது என தெரியாமல் தவிப்பதாக மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அவர்,

சுஜித்தின் இழப்பு அவனது தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல என்றும், அது நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தை சுஜித் நம் நினைவில் இருந்து நிச்சயம் நீங்கமாட்டான் என்றும், காலங்கள் கடந்தாலும் அவனது மறைவு நினைவில் இருந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட பாலகன் சுஜித், இப்போது அனைவருக்கும் நிரந்தர சோகத்தை கொடுத்துவிட்டு போய்விட்டான் என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனி ஒரு உயிர் கூட பலியாகிவிடக்கூடாது என்றும், அதுவே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! #RIPSujith
— M.K.Stalin (@mkstalin) October 29, 2019
ஆழ்துளை கிணற்றுக்குள் எத்தனையோ உயிர்கள் பலியாகிவிட்டதாகவும், இனி மேல் அதுபோன்ற ஒரு நிகழ்வு எந்த இடத்திலும் நடைபெறக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சிறுவன் சுஜித் மீண்டுவந்துவிடுவான் என காத்துக்கொண்டு இருப்பதாகவும், அவன் மீண்டு வந்துவிட வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications