தெற்கில் உதித்த விடியல் இந்தியா முழுவதும் பரவ வேண்டும்! ஆவலை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தெற்கில் உதித்த விடியல் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்ற தனது ஆவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பாஜக இல்லாத தென்னிந்தியா என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கையோடு அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;

''கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. சித்தராமையா அவர்களுக்கும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா!'' இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications