ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை
சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை காலை 10 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாளை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டசபை தேர்தலையொட்டி 'என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச் சாவடி' என்ற தலைப்பில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 8) நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் அமரச் செய்து, காணொலி வாயிலாக பங்கேற்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications