போவதற்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ்! வருவதற்கு கோவை எக்ஸ்பிரஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் டூர் ஷெட்யூல்!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று மாலை வேலூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், போவதற்கும், வருவதற்கும் ரயில் பயணத்தை தேர்வு செய்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வேலூர் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு;

இன்று மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின் 5.15 மணிக்கு திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அங்கிருந்து மாலை 5.20க்கு புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின், மாலை 5.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடைந்து வேலூருக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கிறார்.
இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடையும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து தனியார் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு தனியார் விடுதியிலிருந்து புறபட்டுச் சென்று வேலூர் அண்ணா சாலையில் உள்ல பெரியார் சிலைகு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மேல்மனவூர் அகதிகள் முகாம்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், மதியம் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கிறார்.
பிறகு மாலை 4.30 மணியளவில் விடுதியிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். அதன் பிறகு இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் செல்லும் அவர், கோவை எக்ஸ்பிரஸில் பயணித்து இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார்.












Click it and Unblock the Notifications