புத்தாண்டை கொண்டாட இரவா பகலா?.. "சியர்ஸ்" போதுமே.. சென்னை ஓட்டல்களில் பகலில் களைகட்டும் பார்ட்டிகள்
சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் பகல் நேரத்திலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல ஹோட்டல்களில் களை கட்ட தொடங்கிவிட்டன.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா இந்தியாவில் பரவி வருகிறது.
தமிழகத்திலும் ஒருவர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை, புதுவையில் இன்று இரவு 10 மணிக்கு ஹோட்டல்கள், மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு
அது போல் சென்னையில் உள்ள 75 மேம்பாலங்களை மூடுவதற்கு காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன. அதாவது இரவு நேரத்தில் முக்கிய சாலைகள் தடுப்பு போட்டு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

கமிஷனர் தகவல்
அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க இன்று இரவு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

மனமுடைந்த இளைஞர்கள்
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு மக்கள் வர வேண்டாம் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளதால் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட முடியாமல் மனமுடைந்தனர்.

களை கட்டிய கொண்டாட்டம்
இதனால் புத்தாண்டை கொண்டாட இரவு என்ன, பகல் என்ன, நமக்கு தேவை கொண்டாட்டம் என்ற ரீதியில் சென்னையில் பகல் நேரத்திலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. நட்சத்திர ஹேட்டல்களில் களைகட்டிய கொண்டாட்டங்கள் இரவு 9.30 மணி வரை தொடரும்.

தடை விதிப்பு
இரவு நேரங்களில் தடையை மீறி ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது. ஆனால் தற்போது பகலிலேயே கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன, நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரவு கொண்டாடத்தான் தடை என்றாலும் மக்கள் கூடுவதற்குத்தான் அது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளனவே தவிர இரவு , பகல் என்றெல்லாம் இல்லை.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications