+2 ரிசல்ட்.. நாடு முழுக்க ஒரே கணக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியதில்லை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நாடு முழுவதும் ஒரே முறையை பயன்படுத்தி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கணக்கிட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முழுக்க ஆந்திர பிரதேச மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 12ம் வகுப்பு தேர்வுகள் கைவிடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் மாணவர்களை தேர்வு எழுத வர சொல்ல முடியாது என்பதால் தேர்வுகள் கைவிடப்பட்டுள்ளன.

இறுதி தேர்வு இன்றி மாணவர்களை அனைவருக்கும் தேர்வு முடிவுகளை கணக்கிடும் முறைகளை மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறைகளை பின்பற்ற உள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்ஹார், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பொதுநல வழக்கில், நாடு முழுவதும் ஒரே முறையை பயன்படுத்தி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கணக்கிட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில போர்ட் என்று எதுவாக இருந்தாலும் அவர்களே மதிப்பெண் கணக்கிடும் முறையை முடிவு செய்யலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாட திட்டம் வேறு மாதிரி உள்ளது. அப்படி இருக்கும் போது ஒரே மதிப்பெண் கணக்கீட்டு முறையை மேற்கொள்ள உத்தரவிட முடியாது. இதனால் மாநில அரசுகள், வல்லுநர்களிடம் ஆலோசித்து, மதிப்பெண் கணக்கிடும் முறையை இறுதி செய்யலாம்.
ஆனால் இந்த முறையை பற்றி உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என்று இன்னும் 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications