Vairamuthu: மதங்களுக்கு எதிராக மதமாற்றம் மதம் கண்டவர் கார்ல் மார்க்ஸ்.. வைரமுத்து பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் கடந்த 6 ஆம் தேதி திறந்து வைத்தார். .

Vairamuthu

காரல் மார்க்ஸ் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:-

கார்ல் மார்க்ஸ்

மனிதகுலச் சிந்தனைமீது
மேலதிகத் தாக்கம் செலுத்திய
மெய்யாளன்

பூகம்பம் இல்லாமல்
பூமியை அசைத்தவன்

உழைப்பால் உலகை
ஒன்றுபடுத்த நினைத்து
நாடற்றவனாய்ச்
செத்துப்போனவன்

அவன் எலும்புகளை
வறுமையின் ரம்பப் பற்கள்
அறுத்த போதும்
"தத்துவத்தின் வறுமை"
எழுதியவன்

ஆடைகளை
அடமானம் வைத்து
உழைக்கும் வர்க்கத்தின்
மானம் காத்தவன்

குழந்தையின் காலணிகளை
அஞ்சல் செலவுக்கு
அடமானம் வைத்தவன்

மதங்களுக்கெதிராய்
மதமற்ற மதம் கண்டவன்

அறிவுக் காதல்
அவன்மீதெனக்கு

31.05.1993
லண்டன் ஹைகேட்டில்
மார்க்ஸின்
கல்லறை கண்டடைந்தேன்;
முட்புதர் களைந்து
மலர் வளையம் வைத்தேன்

கல்லறையில் உள்ளது
மார்பளவுச் சிலைதான்;
கன்னிமாராவில் நிற்பது
முழு உருவச் சிலை

நன்றி
முதலமைச்சர் அவர்களே!" என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+