அப்பவே சொன்னேன்.. இதுதான் நடக்கும்னு.. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ராமதாஸ்!
Recommended Video

சென்னை : ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப் படுத்த முடியாது என்று கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது.
ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின் சாரத்தையும் உடனடியாக வழங்கவும் ஆணையிட்டது.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரும் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இந் நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை: செய்தி - என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது. உலக நீதிமன்றத்துக்கு சென்றாலும் திறக்க முடியாது என்றவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? இனியாவது சட்டம் இயற்ற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) December 15, 2018
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது. உலக நீதி மன்றத்துக்கு சென்றாலும் திறக்க முடியாது என்றவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? இனியாவது சட்டம் இயற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications