இருக்கு.. சம்பவம் இருக்கு! தமிழ்நாட்டை நெருங்கும் புயல் சின்னம்.. வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடதமிழக கடற்பகுதியை புயல் சின்னம் இன்று (டிசம்பர் 24) நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி திசை திரும்பிய புயல் சின்னம் இன்று, மேற்கு-தென்மேற்கே நகர்ந்து வடதமிழகம், தென் ஆந்திரத்தை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

Storm System Likely to Approach North Tamil Nadu Coast Today Meteorological Department

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த நிகழ்வின் காரணமாக நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அதைத்தொடர்ந்து இன்று வட தமிழக கடலோரத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 26 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்பட்டது. மேலும், இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும். நாளை (25 ஆம் தேதி) தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை புதுச்சேரியை புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மீண்டும் புதுச்சேரியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+