Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகளுக்கு பறந்த பரபர உத்தரவு.. ஆஹா பொதுமக்கள் செம ஹேப்பி! இது முக்கியம் ஆச்சே.. என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் விரிவான ஒரு பொது விநியோக முறை இருக்கிறது. அரிசி, சர்க்கரை என பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

Strict action will be taken on Ration employees who are not following the time properly

அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் உரிய நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் செயல்பட வேண்டிய நேரங்களிலும் ரேஷன் கடைகளைப் பூட்டி வைத்திருப்பதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

உத்தரவு: இதற்கிடையே ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இப்போது இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.

சில ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறப்பதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டுறவுத்துறை இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.. சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

நேரம்: அதேபோல மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் இதனைக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேரம் மாறறம்: இதற்கிடையே தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மதியம் ஒரு மணி நேரம் வரை கடைகள் மூட அனுமதி தரப்படும் நிலையில், அந்த நேரத்தில் தான முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மதியம் ரேஷன் கடைகள் மூடப்படும் நேரத்தைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+