ரேஷன் கடைகளுக்கு பறந்த பரபர உத்தரவு.. ஆஹா பொதுமக்கள் செம ஹேப்பி! இது முக்கியம் ஆச்சே.. என்ன மேட்டர்
சென்னை: ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் விரிவான ஒரு பொது விநியோக முறை இருக்கிறது. அரிசி, சர்க்கரை என பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் உரிய நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் செயல்பட வேண்டிய நேரங்களிலும் ரேஷன் கடைகளைப் பூட்டி வைத்திருப்பதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
உத்தரவு: இதற்கிடையே ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இப்போது இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.
சில ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறப்பதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டுறவுத்துறை இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.. சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரம்: அதேபோல மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் இதனைக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேரம் மாறறம்: இதற்கிடையே தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மதியம் ஒரு மணி நேரம் வரை கடைகள் மூட அனுமதி தரப்படும் நிலையில், அந்த நேரத்தில் தான முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மதியம் ரேஷன் கடைகள் மூடப்படும் நேரத்தைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications