கறார் காட்டும் ஆளுநர்.. விஜய் வாகனத்திற்கு மட்டும்தான் அனுமதி! ஆதவ் அர்ஜுனாவுக்கு நோ என்ட்ரி!
சென்னை: ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த விஜய்க்கு இப்போது வரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றிருக்கிறார் விஜய். அவருடன் சென்ற ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே விஜய் வாகனம் மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அவரால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அவர் முதலமைச்சர் ஆவதில் பெரிய இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இருப்பினும் ஆளுநர் தரப்பில் பதில் இல்லை. வழக்கமாக பெரிய கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அக்கட்சி சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதுமானது.
எனவே மீண்டும் இன்று ஆளுநரை சந்திக்க விஜய் சென்றிருக்கிறார். அவருடன் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தலைவர்கள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. விஜய் வாகனத்திற்கு மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பெரும்பான்மை விஷயத்தில் இன்னும் விஜய்க்கு இக்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில் ஆளுநர் விஷயத்தில் விஜய் பக்கம் இக்கட்சிகள் நின்றிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications