சென்னை, புறநகர்களின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய பேய் மழை.. பலத்த காற்று, இடி, மின்னலுடன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலை அதி பயங்கரமாக பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கருத்த வானம் பல பகுதிகளில் கன மழையைக் கொண்டு வந்தது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிக பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புறநகர்களில் எதிரில் வருவோர் தெரியாத வகையில் மிக அடர்த்தியாக பேய் மழை கொட்டியது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே சில நேரம் வெயில் அதிகமாகவும் அவ்வப்போது சின்னதாக மழையுமாக இருந்து வருகிறது.

Strong winds slam Chennai suburbs

இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆனால் மழை இல்லை. அதேசமயம் மாலை 5 மணிக்கு மேல் புறநகர்கள் பலவற்றில் பயங்கர காற்று வீசத் தொடங்கியது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக இந்த பலத்த காற்று நீடித்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

அதேபோல நகரின் பல பகுதிகளிலும் வானம் கருத்து இருட்டிக் கொண்டு வந்தது. பலத்த காற்றும் வீசியது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மெரீனா கடற்கரைக்கு வந்தோர் திடீரென வானம் இருண்டு போனதாலும், கன மழை பெய்யத் தொடங்கியதாலும் ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

Strong winds slam Chennai suburbs

தென்சென்னையில்..

இதேபோல் அடையாறு, திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.

காற்றை விரட்டிய கன மழை

பல இடங்களில் பலத்த காற்று நின்று மிக பலத்த மழை பெய்து வருகிறது. காற்று இல்லாமல் போனதால் மழை கன மழையாக இருக்கிறது. விடாமல் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Strong winds slam Chennai suburbs

வெப்பச்சலனம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னையை பொறுத்தவரையில், மாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேபோல தற்போது கன மழை வந்துள்ளதால் மக்கள் குளிர்ச்சியடைந்துள்ளனர்.

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு கோவை மாவட்டம் சின்னக்கல்லூரில் 6 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம், நீலகிரி மாவட்டம் ஜி பஜார் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+