மாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் பரபரப்பு!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து மாணவர்கள் நேற்று இரவில் இருந்து போராடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து மாணவர்கள் நேற்று இரவில் இருந்து போராடி வருகிறார்கள்.
சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் லிப்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
லிப்டில் இருந்த பணியாளர் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறார். இதனால் கத்தி கூச்சலிட்ட பின் லிப்டை நிறுத்தி வேகமாக வெளியே ஓடியுள்ளார்.

இல்லை
இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாணவி புகார் அளித்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் இன்னும் கல்லூரி நிர்வாகம் அந்த பணியாளரை வேலையை விட்டு நீக்கவில்லை.

மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அந்த பணியாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்லூரியில் போராட்டம் நடத்தினார்கள்.

தொடர்கிறது
நேற்று தொடங்கிய போராட்டம் இன்று உச்சம் அடைந்தது. நேற்று இரவு மாணவிகள் மட்டுமே போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாணவர்களும், மாணவிகளுடன் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

என்ன நடவடிக்கை
இந்த நிலையில் அந்த பணியாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. அவரை போலீஸ் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications