கனவில் நினைக்காத ஒன்று.. 2020ல் மாணவர்களால் மறக்க முடியாதது ஆன்லைன் கிளாஸ்!
சென்னை: மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் மொத்த பள்ளிக்கூடமும் ஆன்லைனில் நடக்கும் என்று.. உண்மை தான் கொரோனாவால் இதுவரை நடக்காத ஒன்றான ஆன்லைன் கிளாஸை மாணவர்கள் பார்த்தனர்.
கொரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. மீண்டும் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டு தொடங்கி ஆறுமாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லை கிளாஸ் முறையில் தான் வகுப்புகள் இயங்குகின்றன.

ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசு தேர்வுகளை வைக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை என்ற நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆன்லை கிளாஸ் படிப்படியாக ஆரம்பம் ஆனது.
அரசு பள்ளிகளும் ஒரு கட்டத்தில் ஆன்லை கிளாஸை தொடங்கின. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் குடும்பத்திற்கு கல்வி எட்டுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத ஏழைகள் பாடங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது ஸ்மார்ட் போன் வைத்துள்ள நண்பர்களுடன் இணைந்து கல்வி கற்கும் நிலை தான் இப்போது உள்ளது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்புகள் இல்லை. ஒருவேளை பொங்கல் பண்டிகை முடிந்து திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தால் அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடும். மாறாக கொரோனா ஒருவேளை அதிகரித்தால் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் தொடரும் என்பது கசப்பான உண்மை.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகள் தான் ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே ஆன்லைன் கிளாஸ் என்ற ஒன்றை முதல்முறையாக கண்டது 2020ம் ஆண்டில் தான். அந்த வகையில் மாணவர்களால் இந்த ஆண்டை மறக்கவே முடியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications