பேரறிவாளன் உள்பட 7 தமிழர் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் : ஜனாதிபதிக்கு சு. வெங்டேசன் கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடிதம் எ
சென்னை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். 7 பேரும் மிக மிக அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும், அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய சட்ட அமைப்பின் படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாக கடைபிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ,பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்கள் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறியதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . எனவே இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மிக மிக அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்கின்ற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications