சென்னையில் கார் மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு... பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை..!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் பிரசன்னா. தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக வண்டலூரில் பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதி வேகத்தில் வந்த எஸ்.யூ.வி. ரக கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னா மீது மோதியது. அதில் நிலைகுலைந்து போன அவர், படுகாயங்களுடன் துடிதுடித்துள்ளார். இதையடுத்து போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் பிரச்சன்னாவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷடவசமாக சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்திய கார் உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வடபழனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் சென்னை காவல்துறையினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த டெக்னிக்கல் எஸ்.ஐ. பிரசன்னாவுக்கு 25 வயது மட்டுமே ஆகிறது. மிக இள வயதில் தனது திறமையை கொண்டு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், தனக்குள் எத்தனை ஆசைகளை கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை.
காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னாவின் உடற்கூராய்வு முடிந்து அவரது சொந்த ஊரான கோலியனுருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தனையோ வம்பு வழக்குகளில் தலையிட வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு அதில் தலையிடும் பட்சத்தில் அவர்களுக்கான எதிரிகளும் அதிகரிக்கத் தொடங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications