ஏங்க.. எனக்கு 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டு கிடைக்கலை.. உங்களுக்கு.. 10 நாளா இதே கதையாம்!
5 ரூபாய், 10 ரூபாய்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டு கிடைக்காமல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாம்!
மெடிக்கல் ஷாப், பேக்கரி, ஹோட்டல்கள், புரோட்டா கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகள் என எல்லா இடங்களிலுமே ரொம்ப ரொம்ப முக்கியம் சில்லறைதான். இப்போது சில தினங்களாகவே 5 ரூபாயும், 10 ரூபாயும் கிடைக்கவே இல்லையாம். நிறைய தட்டுப்பாடு இருக்கிறதாம்.
10 நாட்களாகவே இந்த பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மக்களை விட அதிகமாக திணறுவது கடைக்காரர்கள்தான்!
இதனால் கஸ்டமர்களுக்கு சில்லறை தருவதற்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகிறார்களாம். அதேபோல, 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் கொடுத்தால் வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர்கள் கொடுத்தால் வியாபாரிகளும் வாங்க மறுத்து வருகின்றனர்.
இலங்கை தாக்குதல் எதிரொலி.. சிஎஸ்கே போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.. சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு
இதை பற்றி பொதுமக்கள் கருத்து சொல்லும்போது, "சின்ன சின்ன பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட, ரொம்ப நேரத்துக்கு கடையில் காத்து நிற்க வேண்டியதாகிறது. இல்லையென்றால், அதற்குரிய விலைக்கு வேறு எதையாவது தேவையே இல்லாமல் வாங்கி செல்ல வேண்டியதாகிறது. இதற்கெல்லாம் எப்போதுதான் விடிவு வருமோ" என்று புலம்புகின்றனர்.
ஆனால் ஒன்று.. எல்லா இடங்களிலும் 100, 200 ,500, 2000 ரூபாய்கள் நிறையவே கிடைக்கிறதாம்.