அப்பாடா.. சென்னை விட்ட நிம்மதி பெருமூச்சு! சட்டென கொட்டி தீர்த்த மழை.. குளுகுளுவென மாறிய வானிலை
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று இரவு சென்னையில் பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்திருக்கிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை பொறுத்த அளவில் பொதுவாக மார்ச் 10 தேதியில்தான் வெயில் கடுமையை காட்ட தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மார்ச் மாதம் முழுவதும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவுக்கு சுட்டெரித்தது. ஏப்ரல், மே மாதங்கள் சொல்லவே தேவையில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு வெயில் கடுமை காட்டியது. சரி ஜூன் வந்த சரியாயிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர் ஒரு வழியாக ஜூலை மாதம் இந்த வெயில் சற்று குறைந்து மழை மேகங்கள் மழையை கொட்ட தொடங்கின. தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இருப்பினும் கடந்த 4 நாட்களாக வெயில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெடித்திருக்கிறது. மதுரை, திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது. சென்னையிலும் வெயில் தனது வேலையை காட்டியது. இன்று காலை முதல் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்துள்ளது.
சென்னையின் வில்லிவாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, அயனாவரம் புரசை போன்ற இடங்களில் திடீரென மழை பெய்திருக்கிறது. இதனால் ஓரளவுக்கு புழுக்கம் குறைந்திருக்கிறது. இந்த மழை குறித்து ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதாவது, "தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications