கோடை காலத்தை கூலாக கடந்திடலாம்... இந்த விஷயங்களை மறக்காம பின்பற்றுங்க - டாக்டர் ஒய். ஆர். மானக்சா
கோடை வெப்பத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அந்த நோய்களில் இருந்து தப்பிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.
திருநெல்வேலி: கோடை வெயிலினால் பலரும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சரும வறட்சி, முகத்தில் கட்டி, தலைமுடி உதிர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை பலரும் சந்திக்கின்றனர். கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க நமது ஒன் இந்தியா வாசகர்களுக்காக பிரத்யேக ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா.
கோடைகாலத்தில் சுகாதாரமில்லாத உணவுகள் குளிர்பானங்கள், தண்ணீர் இவைகளால் பாதிக்கும் நோய்கள் அதிகமாக வரும் குறிப்பாக சீதபேதி ,குடல் புண்கள்(ஹெச் பைலோரை) ஹெபடைட்டிஸ்(மஞ்சள் காமாலை), டைபாய்டு, போன்ற நோய்கள் அதிகமாக வரும் ஆகவே தண்ணீரை கொதிக்கவைத்து சூடு ஆறிய பின்பு குடிக்கலாம். சுகாதாரமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரக்கின்றது. நம்முடைய உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் கோடைகாலத்தில் வெப்ப நிலை 40 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை செல்வதால் உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வையை தோல் சுரக்கிறது.

தோல் நோய்கள்
தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் எண்ணெய் பசைகள், வியர்வையில் இருந்து வெளிப்படுகின்ற உப்புக்கள் இவை சரியாக வெளியேறாமல் தங்கி விடுகின்றது இதனால் வேர்க்குரு,முகப்பரு, பூஞ்சை தொற்றுகள் அதிகமாக கோடைகாலத்தில் ஏற்படுகின்றது. தினசரி குளிப்பதற்கு முன்பாக அருகம்புல் சாறை தேங்காய் எண்ணெயுடன் காய்த்து அந்த எண்ணையை உடலில் தேய்த்து வர வேண்டும் இதனால் தோல் வறட்சி நீங்கும்.

தோல் நோய் நீங்க
வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், கோரைக்கிழங்கு ,பாசிப்பயறு, கார்போகரிசி, நெல்லி வற்றல், ஆவாரம் பூ இவைகளை பொடித்து வைத்த நலங்கு மாவை தேய்த்துக் குளித்துவர தோல் சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். முகப்பரு வந்திருந்தால் பரு உள்ள இடங்களில் கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெயில் காய்த்து போடலாம். கடல் சங்கை தண்ணீர் விட்டு உரசி முகப் பரு உள்ள இடங்களில் பூசி வரலாம்.

தலை வலி பாரம் நீங்க மருந்து
சைனசைட்டிஸ்-கோடைகாலங்களில் தலை அதிகமாக வியர்ப்பதால் சைனஸ் வெற்றிடங்களில் நீர் கோர்த்து அதனால் தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு ஏற்படுகிறது. வெந்நீரில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக ஆவி பிடிக்க வேண்டும் ,அதே போன்று வெந்நீரில் நொச்சி இலை போட்டும் ஆவி பிடிக்கலாம். தலைவலிக்கு சுக்கு அல்லது கிராம்பை தண்ணீரில் ஒரசி தலைவலி உள்ள இடத்தில் பூசலாம்.

வெயில் காலத்தில் தலைமுடிவு உதிர்வை தடுக்க தைலம்
வெயில் காலத்தில் ஏற்படுகின்ற தலைமுடி உதிர்தல் நிற்க தைலம் உள்ளது. நாமே எளிமையாக தயாரிக்கலாம். நெல்லிக்காய் சாறு,கருவேப்பிலை சாறு,கரிசலாங்கண்ணிச் சாறு,10 செம்பருத்திப் பூ,வெந்தயம் 10 கிராம் கருஞ்சீரகம் 10 கிராம், வெண்மிளகு 5 கிராம்,இவைகளை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்றாக காய்த்து தலையில் தேய்த்து வர பொடுகு ,தலை ஊரல்,முடி உதிர்தல் நீங்கி தலை முடி நன்றாக கருமையாக வளரும்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications