"ஈரக்குலையே" நடுங்கி போச்சு.. கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுது.. நொறுங்கி போன ஓனர்.. நெகிழ்ச்சி
ஆடு ஒன்று சந்தையில் கதறி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: ஆடு ஒன்று கதறி கதறி அழும் வீடியோ, காண்போர் இதயத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது... என்ன காரணம்?
Recommended Video
பக்ரீத் பண்டிகை என்றாலே பிரியாணிதான் ஸ்பெஷல்... பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக பார்க்கப்படும்..
அதனால்தான், கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை ஜரூராக நடக்கும்.. அந்த வகையில், இந்த முறை பக்ரீத் பண்டிகைக்கும் ஆடுகள் ஏராளமாக விற்பனை ஆனது..

குர்பானி
குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் என்ற சந்தையில் ஒரு ஆடு ரூ.8 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.. காரணம், இந்த சந்தையானது நாட்டிலேயே முன்னணி கால்நடை விற்பனை சந்தைகளில் ஒன்றாகும்.. இங்கு மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள், மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்...

ஸ்பெஷல் காதுகள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோட்டா என்ற இடத்தில் இருந்து வந்த ஆடு ஒன்று ரூ.8 லட்சத்திற்கு விற்பனை ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஆட்டின் எடை சுமார் 170 கிலோவாம்.. இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? காதுகள் 16 முதல் 17 இன்ச்கள் நீளமாக இருந்ததுதானாம்.. அதுமட்டுமல்ல, இந்த ஆட்டை பராமரித்துப் பார்த்துக்கொள்வதற்காகவே, 2 பேரை வேலைக்கு வைத்திருந்தாராம் , ஓனர் ஆசிப்..

கட்டிப்பிடித்து அழுதது
சந்தையில் இந்த ஆட்டை பற்றி பூரிப்புடன் சொல்லி கொண்டே இருந்தார்.. அதேபோல, இந்த 2 நாட்களாக ஒரு ஆடு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. இது எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை.. குர்பானிக்காக இந்த ஆட்டை விற்பதற்காக, அதன் ஓனர் சந்தைக்கு அழைத்து வந்தார்.. ஒருநபர் அந்த ஆட்டை விலை பேசினார்.. பிறகு ஓனரிடம் பணத்தை தந்துவிட்டு, ஆட்டை கிளப்பி கொண்டு போக முயன்றார்.. அப்போது திடீரென அந்த ஆடு, ஓனரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டது.. அந்த ஆட்டை சமாதானப்படுத்த முயன்றும் ஓனரால் முடியவில்லை..

விக்கி விக்கி அழுதது
அழுகையை ஆடு நிறுத்தவே இல்லை.. விக்கி விக்கி அழுததை பார்த்து, சந்தைக்கு வந்தவர்கள் கண்கலங்கி நின்றனர்.. ஓனரும் கண் கலங்கினார்... இதனை பார்த்ததும் அந்த ஆட்டினை வாங்கிய நபர், பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த ஆட்டை ஓனரிடமே கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.. அதற்கு பிறகு ஆடு அழவில்லை.. நெஞ்சை பிசையும் இந்த பாசப்போராட்டத்தின் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications