Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. ரேஷன்தாரர்களுக்கு மகிழ்ச்சி.. துள்ளுது சேலம்.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.

தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.. இது ரேஷன்தாரர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டது.

Super announcement for Ration Card Holders by Tamil Nadu Government and New Ration Cards for Salem District

புதுகார்டு: எனவே, புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். ரேஷன் கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தும், புது கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தன.

இதன் காரணமாக, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வந்தது.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நின்ற.. இதனால் ரேஷன்தாரர்களால், பொருட்களை வாங்க முடியவில்லை.. இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளுமே நடக்கவில்லை..

அறிவிப்பு: தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது.. அதனால், விண்ணப்பித்து காத்திருப்போர், இன்னும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் அச்சம் கிளம்பியது. ஆனால், கடந்த வாரம், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.. இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாகவும், அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பிறகு கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

விண்ணப்பம்: இந்நிலையில், சேலம் மாவட்டத்துக்கு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.. அதாவது சேலம் மாவட்டத்தில் 2023 மார்ச் முதல் ஜூலை வரை விண்ணப்பித்தவர்களில் 3460 தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்களாம்.. தேர்வானவர்களுக்கான கார்டுகள், 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டு விட்டுள்ளது..

இதில், சேலம் தாலுகாவுக்கு, 484, ஓமலூர், 380, சேலம் மேற்கு, 321, மேட்டூர், 298, சேலம் தெற்கு, 283, வாழப்பாடி, 281, தலைவாசல், 276, இடைப்பாடி, 227, சங்ககிரி, 196, காடையாம்பட்டி, 188, ஆத்தூர், 187, பெத்தநாயக்கன்பாளையம், 164, கெங்கவல்லி, 145, ஏற்காடு, 30 என தாலுகாவிற்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்வானவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு நேரில் சென்று கட்டணம் ஏதும் இன்றி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புது ரேஷன் கார்டு: கடந்த 2023 ஆகஸ்ட் முதல், இப்போது வரை புது கார்டுக்கு 8,500க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.. எம்பி தேர்தல் முடிவுக்கு பிறகு, அரசு ஒப்புதல் பெற்று தகுதியானவர்களுக்கு, புது ரேஷன் கார்டு வினியோகம் இருக்கும் என்று வட்ட வழங்கல் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், விண்ணப்பித்த பலருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+