அமைச்சர் செந்தில் பாலாஜியின் ”ஒற்றை நம்பிக்கை”- உச்சநீதிமன்றத்தில் நாளை ஜாமீன் மனு மீது விசாரணை!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்க்ல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். தமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி ஜாமீன் கோரியிருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 18-ந் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், உடல்நலன் பாதிப்பை காரணமாக காட்டி இருப்பதை சென்னை உயர்நீதிமன்றம் விரிவாக ஆராயவில்லை. சகோதரர் அசோக் தலைமறைவாக இருப்பதை ஒரு காரணமாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த காரணத்தை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனை ஆவணங்கள் நாளை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை மிக முக்கியமானதாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications