Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டென்சனில் பொன்முடி..இப்படி ஒரு நல்ல நீதிபதியா? ஆனந்த் வெங்கடேசை பாராட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின், சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறையால் செய்யப்பட்டது. இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

Supreme court wish Justice Anand Venkatesh who take suo moto of Ponmudi

பல்வேறு கட்டங்களாக அங்கு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாக வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது 3,630 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2003 ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி உட்பட 10 பேரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இதற்கிடையே பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதுடன், அவரும் 2 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்டு ஜூன் 28 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை கையில் எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு எடுத்தார். நீதித்துறை வரலாற்றிலேயே இது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதனை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். மேலும், "ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்." என அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+