உச்சநீதிமன்ற தீர்ப்பால் இனி எந்த மாநிலத்தையும் துண்டு துண்டாக கூறு போடலாம்- எச்சரிக்கும் திருமாவளவன்
சென்னை: ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, "இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு வழிவகுக்கும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்பியுமான தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் பரிந்துரை இல்லாமலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாகின.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: 'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே' என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே இது அயோத்தி தீர்ப்பைப் போலவே அமைந்துள்ளது. எனவே, அதிர்ச்சி இல்லை. ஆனால் அச்சம் மேலிடுகிறது.
கடைசி நம்பிக்கையாகவுள்ள உச்ச நீதிமன்றத்தின் மீதான மதிப்பீடு கேள்வி குறியாகி உள்ளது. அரசமைப்புச்சட்டம் உறுப்பு எண்-370 இடைக்கால ஏற்பாடு என்பது வரலாற்று உண்மைகளைப் புதைக்கும் மாபெரும் துரோகம்.
இனி எந்தவொரு மாநிலத்தையும் துண்டுத் துண்டாகக் கூறுபோடமுடியும் என்கிற நாசகாரப் போக்கிற்கு இது வழிவகுக்கும். யாரைக் கடிந்து கொள்வது? இனி என் செய்வது? என்னும் இயலாமையே எஞ்சுகிறது. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications