அரசு பஸ் ஊழியர்களுக்கு போன ஷாக் நியூஸ்.. கடன் உதவி நிறுத்தம்.. கூட்டுறவு கடன் சங்கம் அதிரடி!
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சங்க கழகத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடன் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை, போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சங்க கழகத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், கடன் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்க செயலாளர் உமாசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து கழகங்கள் உறுப்பினர்களின் கடனுக்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்த மாத தவணை தொகையை சங்கத்துக்கு செலுத்தவில்லை. ரூ.22 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் கடன் வழங்குவது மற்றும் சங்க கணக்கை முடித்தவர்களுக்கு தொகை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.
மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிடித்தம் செய்த தொகையை போக்குவரத்து கழகங்களிடமிருந்து வசூலிக்க உரிய நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே, நேற்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை உறுப்பினர்களிடம் இருந்து கடன் மனுக்கள் பெறப்படும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு பிடித்தம் செய்த தொகை மட்டும் கடனாக வழங்கப்படும். நிதிநிலைமை காரணமாக கடன் உயர்வு வழங்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications