"காக்க காக்க படத்தில்.. என் ரோல் மாடலே இவர்தான்".. சூர்யா வியந்து பாராட்டிய சைலேந்திர பாபு!
சென்னை: தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபு, நடிகர் சூர்யாவின் மாடலாவார். இதை சூர்யாவே தெரிவித்திருந்தார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சைலேந்திர பாபு ஏஎஸ்பி, எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, குறிப்பிட்ட ஒரு துறையின் டிஜிபியாக பதவி வகித்து வந்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஜே கே திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து புதிய டிஜிபியாக யாரை திமுக அரசு தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

உள்துறை அமைச்சகம்
அதன்படி 5 பேரின் பெயர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது. அதில் இருந்து மூவரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து ஒருவரை திமுக அரசு தேர்வு செய்தது. அந்த ஒருவர்தான் சைலேந்திர பாபு. இவர் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்.

தனி ரசிகர் பட்டாளம்
தனது பணிக்காலத்தில் ஏழை மாணவர்களுக்கும் பெண்களுக்கும் கணினி வகுப்புகள், கராத்தே வகுப்புகளை நடத்தியவர். சென்னை, கோவை மாரத்தான்களில் ஓடியவர். தினமும் எளிய உடற்பயிற்சிகளை இளைஞர்களுக்கு சமூகவலைதளங்களில் கற்பித்து வருகிறார். இவர் போடும் வீடியோக்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பிடித்தமான ஒன்று
இது தவிர புத்தகங்களை எழுதுவதும் இவருக்குப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. உனக்குள் ஒரு தலைவன், சிந்தித்த வேளையில், உங்களுக்கான 24 போர் விதிகள், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உடலினை உறுதி செய், சாதிக்க ஆசைப்படு உள்பட பல ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

போலீஸ் அதிகாரி
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, சைலேந்திர பாபுவை மனதில் வைத்துக் கொண்டே நடித்ததாக நடிகர் சூர்யாவே தெரிவித்திருந்தார். இப்படி பலரின் ரோல் மாடலாக திகழும் சைலேந்திர பாபுவின் பணிச் சிறக்க வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications